Daily Archives: மே 16, 2010

2 கல்லறைகளின் மீதாவது உறங்கி; உயிர்திருப்போம்!

எம் சுவாச மூச்செலாம் வெடிகுண்டு நெடியில் விசமேறிப் போயிருந்தும் – விடுதலைக்கென்றே உயிர்சுமந்துத் திரிகிறோம்: தெருக்கள் நெடுகிலும் உலாவந்த எம் சின்னஞ்சிறு குழந்தைகளெல்லாம் வீழ்ந்த குண்டுகளில் சிதைந்துப் போனாலும் தெருவின் கடைகோடி வீட்டின் – ஒற்றை உயிருக்காய் விடுதலை கோரி நிற்கிறோம்; பசுமை குன்றியிரா எம் தேச நிலங்களிலெல்லாம் – கன்னி வெடிகளே புதைந்திருந்தாலும் எடுத்து … Continue reading

Posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.., தமிழீழக் கவிதைகள் | Tagged , , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 75

என்னோடில்லாத கணங்களில் – மரணம் வந்தென்னை பாதி மென்று விடுகையில், தடுத்துக் காப்பாற்றி விடுகிறது; நீ – எப்பொழுதேனும் அனுப்பும் கடிதம்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – 74

உனை விட்டுப் பிரிந்து வருடம் ஒன்றை கடந்த பின்பும் – இன்று என் சட்டையை கழற்றினாலும் அங்கங்கு சற்று – முகர்ந்துக் கொள்வேன்; எங்கேனும் உன் வாசம் மிச்சமிருந்து விடாதா!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 73

இப்பொழுதெல்லாம் நான் – தனியாகத் தான் – இருக்கிறேன்; ஆம்! நீயில்லாத உலகத்தோடு நான் பேசுவதேயில்லை!!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுக்குப் பின் – 72

உன் – கால் கொலுசும்.. கை வளையல்களும்.. சொல்லிடாத – சேதி கேட்டும்; சொன்ன – இரவுகளை நினைத்தும் தான் நகர்கிறது – வாழ்வினிந்த – அர்த்தமற்ற நாட்கள்!

Posted in பிரிவுக்குப் பின்! | Tagged , , , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக