தெரு மூலையில
உடைத்த பூசணிக்கா,
உண்டியல்ல போட்ட காசு,
கோவில்ல நேந்து விட்ட கோழி,
ஆடு வெட்டி போட்ட படையல்,
வருசாவருசம் மிதிக்கும் நெருப்பு,
நாக்குலையும் மூக்குலையும் குத்தும் வேல்,
நாப்பதம்பது நாள் விரதம்……….
இன்னும் இன்னும் இன்னும் என்னென்னவோ;
இதலாம் வேண்டாம்னு –
சாமியே வந்து சொன்னா கூட
சாமியையே முட்டாளென்று சொல்லும்
புத்திசாலிகள் நாம்!
























