காதலியை காதலனை நினைக்காத
காதலர்கள் உண்டா?
மகனை நினைக்காத
அப்பா இருப்பாரா?
அப்பாவ நினைக்காத
அம்மா இருப்பாங்களா?
அம்மாவை நினைக்காத
தாத்தாவோ மாமாவோ இருப்பாங்களா?
மாமாவை அத்தையை
சொந்தங்களை நட்புறவுகளை
நினைக்காத –
நண்பர்களோ உறவுகளோ உண்டா…?
உலகம் உருண்டை என நம்பி
சுழன்றுக் கொண்டிருக்கும் வாழ்க்கையில்
மனசு – யாரையேனும்
நினைத்துக் கொண்டு தான் இருக்கிறது;
பிறகெப்படி –
எப்பொழுதோ ஒருமுறை புரை ஏறினால்
யாரோ நினைப்பதாக அர்த்தம் ??? என்று சிந்திக்க
அங்கிருந்து நூல்பிடிங்க –
மொத்த மூடதனத்திற்கும் பாடை கட்டலாம்!