எப்படியோ –
வேண்டாமென்று நினைத்து நினைத்தே
எதையேனும் உனக்கு
வாங்கி வரும் பழக்கத்தை
உனக்கும் எனக்கும் பழக்கிவிட்டேன்.
வேறென்ன செய்ய –
அப்பா என்று நீ ஓடிவந்து
என் கையை விரித்துப் பார்க்கையில்
ஒன்றுமில்லாது – ஏமாந்து போவாயோ
என மனசு உடையும் வலி –
வாங்கி அரும் அப்பாக்களுக்கே
புரியும்!
























