ஞானமடா நீயெனக்கு – 34

ப்படியோ –
வேண்டாமென்று நினைத்து நினைத்தே
எதையேனும் உனக்கு
வாங்கி வரும் பழக்கத்தை
உனக்கும் எனக்கும் பழக்கிவிட்டேன்.

வேறென்ன செய்ய –
அப்பா என்று நீ ஓடிவந்து
என் கையை விரித்துப் பார்க்கையில்
ஒன்றுமில்லாது – ஏமாந்து போவாயோ
என மனசு உடையும் வலி –
வாங்கி அரும் அப்பாக்களுக்கே
புரியும்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக