பிரிவுக்குப் பின் – 77

ன்னை அடைந்தப்
பின்னரே இரவின்
வெளிச்சங்கள் கூட –
ரகசியமாய் புரிந்தது;

உன்னை பிரிந்த
பின் தானே –
பகலில் கூட வாழ்வின்
இருள்கள் துளிர்கின்றன!

உண்மையில் பகலை தொட்டு
அடையாளம் கண்டுகொள்ளும்
என்னால் –
இரவை தான் நீயின்றி
தொடவே முடிவதில்லை;

ஆயினும் –
இப்போதெல்லாம்
இருபத்தி நான்கு மணிநேர
இருட்டில் தான் வாழ்கிறேன் நான்
உன் – பிரிவுக்குப்பின் என்பது
உனக்கும் எனக்குமே புரியும்!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to பிரிவுக்குப் பின் – 77

  1. ruby's avatar ruby சொல்கிறார்:

    கவிதை நன்று

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி அன்பு ரூபி, உருகி உருகி எழுதியதில் ஒன்று பிரிவுக்குப் பின் தொகுப்பும். தற்போது விற்ப்பனையிலும் உண்டு. 9600000952 என்ற இலக்கத்திற்கு தொடர்புற்று பெற்று படிக்கலாம்..

      Like

பின்னூட்டமொன்றை இடுக