நீயும் நானும்
தெருவில் நடக்கையில் –
நீ என் கை பிடித்து வருவாய்,
உள்ளுக்குள்ளே –
ஆயிரம் தேவதைகள் கூட
நடப்பது போல் உணர்வேன்;
இங்கும் நான்
தனியே நடக்கையில்
நீ ஆயிரம் தேவதைகளோடு வந்து
என் கை பிடித்துக் இழுக்கிறாய்;
நான் திரும்பிப் பார்ப்பேன் –
நீ மட்டும் தெரிவதேயில்லை!
























