பிரிவுக்குப் பின் – 78

நீயும் நானும்
தெருவில் நடக்கையில் –
நீ என் கை பிடித்து வருவாய்,
உள்ளுக்குள்ளே –
ஆயிரம் தேவதைகள் கூட
நடப்பது போல் உணர்வேன்;

இங்கும் நான்
தனியே நடக்கையில்
நீ ஆயிரம் தேவதைகளோடு வந்து
என் கை பிடித்துக் இழுக்கிறாய்;
நான் திரும்பிப் பார்ப்பேன் –
நீ மட்டும் தெரிவதேயில்லை!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக