அன்பு தங்கைக்கொரு பாட்டு..

ம்மா அம்மா எனும் ஓசையை
அண்ணா அண்ணா என்றழைப்பவளே..

எனை சுற்றி சுற்றி வளையவர
அன்பின் –
சாமி போல பிறந்தவளே..

மனசெல்லாம் பரவி
குழந்தை போல வளர்ந்தவளே..

வாழ்வின் அர்த்தங்களில்
முதலிடமாய் ஆனவளே..

ஏனழுதேனென்று கேட்காமலெ
எனக்காக அழுபவளே..

நான் பேசாத மௌனத்தில்
அழுகையாய் கரைபவளே..

கட்டளையிடும் முன்னாலே
செய்கையாய் சிரிப்பவளே..

சிரித்து சிரித்தே
எரிக்கும் கோபத்தையும் – தனிப்பவளே..

அண்ணா என்ற ஒரு அழைப்பில்
என் பிறந்த பயனை தீர்த்தவளே..

எத்தனையோ வாசத்தில்
என் தங்கையாய் பூத்தவளே –

உனை யாரென்று சொல்லி முடிக்கவே
நாட்கள்.. பொழுதுகள்.. போதாதேடி
திருமணமென்று சொல்கிறார்களே
வாழ்த்த எனக்கு வார்த்தையேதடி?

மகிழ்ந்துத் தீர்க்க மனதெங்கே
இருப்பதோ சின்ன – இதயமாச்சேடி;
இறைவனையே துதிக்கிறேன்
வாழி நீ; வாழி நீ பல்லாண்டு காலமடி!

விரும்பிய நல் வாழ்வோடு
நற்பேரும் பல புகழோடு
சீரும் நல் சிறப்பொடு
செல்வங்கள் பதினாறோடு
சீர் பெற்று ஊர் போற்ற –
பெற்ற வயிறும் உற்ற வாழ்வும் இன்புற
மனந்தவரும்; மாந்தர் தம் உலகமெலாம் மகிழ
வாழ்க வாழ்க நீ வாழ்கவே!
—————————————————————————————–
வரும் வைகாசி 12- இல் (26.05.2010) திருமணம் கொள்ளவிருக்கும் தங்கை ச.மீன லோஷினி மற்றும் மாப்பிள்ளை மா.பொ.செல்வக் குமார் அவர்களை அன்புத் தம்பி, அருமை கவிஞன் ‘விருதை பாரியின்’ இடம் நின்று நாமும் வாழ்த்துவோம் தோழர்களே!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in வாழ்த்துக்கள்! and tagged , , , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக