Monthly Archives: மே 2010

ஞானமடா நீயெனக்கு – 34

எப்படியோ – வேண்டாமென்று நினைத்து நினைத்தே எதையேனும் உனக்கு வாங்கி வரும் பழக்கத்தை உனக்கும் எனக்கும் பழக்கிவிட்டேன். வேறென்ன செய்ய – அப்பா என்று நீ ஓடிவந்து என் கையை விரித்துப் பார்க்கையில் ஒன்றுமில்லாது – ஏமாந்து போவாயோ என மனசு உடையும் வலி – வாங்கி அரும் அப்பாக்களுக்கே புரியும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

குவைத் கவிஞர் பிரமோத் மற்றும் சகோதரி மாதவியின் திருமணத்தை முன்னிட்டு

சந்த கவியின் குரலை சிங்க குரலில் வென்றவனே; சின்ன பிள்ளை சிரிப்பில் நெஞ்சம் கொள்ளை கொண்டவனே; கொட்டும் மழை போல இடி முட்டும் மேடைக் கொம்பனே; படை கட்டி எவர் வரினும் சற்றும் சலிக்கா வம்பனே; சங்க கவி போல மாதவி சொந்தம் கொள்ளும் மன்னனே; பெற்றோர் உற்றாரெல்லாம் மகிழ உயர்வாய் வாழ்ந்துக் காட்டு இன்பனே; … Continue reading

Posted in வாழ்த்துக்கள்! | Tagged , , , , , | 3 பின்னூட்டங்கள்

எனை சுட்டுப் போட்ட சமூகம்!!

ஏதோ ஒரு கவிதையின் கிறுக்கலில் – கொட்டிவிட இயலாத உணர்வின் மிகுதியில் நனைகிறது மனசு. காதல் கடந்து வாழ்க்கை கடந்து இறந்த பாட்டி தாத்தாவிலிருந்து இறக்கப் போகும் அப்பாம்மா வரை எண்ணி அழுகிற பலரில் என்னையும் ஒருவராய் வைத்துக் கொள்ளுங்கள். . யார் யாரையோ தேடி எங்கெங்கோ அலைந்து என்னெனவோ செய்து – எதிலுமே நிலைக்காத … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.. | Tagged , , , , , | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 33

உன் காதலி கூட உனக்கு – இத்தனை முத்தம் கொடுப்பாளோ என்னவோ; அத்தனை முத்தத்திற்கு பிறகும் உனையே நினைக்கிறது மனசு!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

ஞானமடா நீயெனக்கு – 32

உண்மையில் – நீ என் மகன் என்பதை விட நான் உன் அப்பாயெனும் மகிழ்வில் மீண்டும் மீண்டுமாய் பிறக்கிறேன்; உன் ஒவ்வொரு சிரிப்பிலும் பூக்கிறேன்; நீ அழுத கணத்தில் உடைகிறேன்; நீ வளர வளர – என்னை நானே தொலைப்பேனோ என்ற பயத்திலும் – உன்னை வளர்க்கிறேன்!

Posted in ஞானமடா நீயெனக்கு | Tagged , , , , , , , | பின்னூட்டமொன்றை இடுக