என் எழுதுகோல் வணங்கிய மாவீரன்

டுக்கத் துணிந்த வரலாறு – திலீபனை
மறந்து தொலைத்தால் பெரும்பாடு;
இதயம் உருக்கும் கதை கேளு – திலீபன்
இறந்து படைத்த உணர்வோடு!

இருபத்திநான்கு வருட – வாழ்க்கையடா
பன்னிரண்டு நாள் – விரதமடா
உயிரை வெல்லக் கொடுத்த வீரனடா
அஹிம்சைக்கு அர்த்தம் தந்த – தியாகியடா!

முடுக்குமூளை உணர்வெல்லாம் –
திலீபன் –
மூளைமுடுக்கு உணர்வெல்லாம் –

விடுதலை உணர்வை கொடுத்த யோகியடா; தன் –
உயிரை கொடுத்து ஈழம் படைக்க –
அவன் இறந்தே உரைத்த ஆணையடா!

உலகம் –
திரும்பிப் பார்த்த தமிழனடா
வீரம் –
செறிந்துக் கிடந்த இளைஞனடா;
திலீபன் மட்டும்
இருந்திருந்தால்-

இன்று திலீபன் மட்டும்
இருந்திருந்தால்-
ஈழம் என்றோ கிடைத்த
செய்தியடா!

எழுந்து வீர
நடை போடு..
விடுதலை கிடைக்காவிட்டால் –
சமர் போடு..
தமிழர் செங்குருதி பாயும் –
இடமெல்லாம்;

தமிழர் செங்குருதி பாயும் –
இடமெல்லாம்;
ஈழம் பிறக்கும் வரைக்கும் –
போராடு!

அன்றைய –
ஐந்து கட்டளை போறாது;
அண்ணலை நினைவு கூர்ந்தால்
அடங்காது;

ஈழம்.. ஈழம்.. கிடைக்கும் வரை –
திலீபனின் ஆத்தமா கூட
உறங்காது!!!!
———————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக