ஞானமடா நீயெனக்கு – 39

நீ முதன் முதலில்
வெளிச்சத்திற்கு வந்து
சூரியனை பார்த்து
கண் கூசுகிறதென –
கண்களை மூடிக் கொண்டு
திறக்க இயலாமல் தவிப்பும் சிரிப்புமாய் நிற்க,

நானும் அம்மாவும்
உனை ‘ஹே…எனக்.. கிண்டலடிக்க,

நீ கண்களையும் திறக்க முடியாமல்
முடியவில்லையே எனும்
இயலாமையையும் மறைக்க முயன்று
சிரித்து மழுப்பிய அழகை
எந்த புகைப்படத்தில் பதிந்து வைப்பேன்????

பதிய இயலாமையில் –
கவிதையாவது செய்தேன்!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு and tagged , , , , , , , . Bookmark the permalink.

2 Responses to ஞானமடா நீயெனக்கு – 39

  1. chellamma vidhyasagar's avatar chellamma vidhyasagar சொல்கிறார்:

    அருமையான கவிதை. சம்பவங்களை கவிதையாக்குவதில் வல்லவர் நீங்கள் தான். வாழ்த்துகள். ‘ஞாணமடா நீ எனக்கு’ எல்லா கவிதைகளும் மிக மிக அருமை.

    Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி