46 எம் வீர காவியம் நின்னு கேளுடா; ஈழம்!

ம் வீர காவியம்
நின்னு கேளுடா
ஈழமுன்னா வெறும்
மண்ணு இல்லைடா..

புலி கொடி பறந்து
ஆண்ட தேசம்டா
உலகை;
இன்றும் தாங்கும்
ஒற்றை இனமடா!

பெண்ணைத் தாயென
பார்த்த பூமிடா
வந்தவரெல்லாம்
வாழ்ந்த மண்ணுடா;

பொண்ணும் பொருளும்
நிறைந்த சொர்க்கம்டா
போட்டதை எல்லாம்
விளைத்த வர்கம்டா..!

காலம் ஏனோ மாறி
போச்சிடா
கயவர்களாலே ஆடி
போச்சிடா;

குழந்தையும் குடும்பமும்
மாண்ட சோகம்டா
கொலைவெறி தரித்து
நடந்த துரோகம்டா!

அறுபது வருடம்
எரியும் நெருப்புடா
அநீதி அழிந்திட
பூண்ட போருடா;

இரண்டில் ஒன்றே
பார்க்கும் வீரம்டா
எதிர்க்கும் காலம்
தூரமில்லடா!

குண்டுகளெல்லாம்
உமிழும் எச்சில்டா
உயிரே கூட
துச்சமில்லடா;

ஈழம் ஒன்றே
கனவு கனவுடா..
விடுதலை ஒன்றே
எல்லை கோடுடா!

காலம் என்ன –
களையா பறிக்கு(ன்)டா????????

காலம் என்ன – எமை
களையா பறிக்கு(ன்)டா –
ஈழம் வெல்ல –
எதிர்த்தா நிற்கும்டா??

ஓரங் கட்டி
நின்ற கணக்கெலாம்
வீரம் பூட்டி
வெல்வதுறுதிடா;

யாம் சேர்ந்தால் ஞாலம்
சுருண்டு போகும்டா –
தமிழன் மூச்சின் வெப்பம்
ஈழம் வெல்லும்டா!!

யாமும் ஓர்தினம்
ஆளுவோமடா –
தமிழன் – ஆண்ட பெருமையை
பாடுவோமடா;

உரக்கக் கத்தி
கூறுவோமடா
ஈழ விடுதலை வெல்லவே
சுவாசிப்போமடா!

வெற்றி என்பது
வெறும் – பேச்சி இல்லடா
புலிக்கொடி பறக்கும்
சாட்சி நாளடா;

இதை நெஞ்சிலேற்றி
நித்தம் வாழடா
விடுதலை வெல்ல
உறுதி கொள்ளடா!! உறுதி கொள்ளடா!!!
————————————————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் and tagged , , , , , , , , , , , . Bookmark the permalink.

1 Response to 46 எம் வீர காவியம் நின்னு கேளுடா; ஈழம்!

  1. வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

    அன்பு வணக்கம் உறவுகளே..,

    இக்கவிதையை எவரேனும் பாட்டாகப் பாட மெட்டு அமைத்துத் தருவீர்களா? மெட்டுக் கட்டினால் நன்றாக இருக்குமா? முடிந்தால் உதவுங்கள். நன்றி!!

    Like

பின்னூட்டமொன்றை இடுக