Monthly Archives: திசெம்பர் 2009

நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 2

தீபாவளி எண்ணெய் தேய்த்துக் குளித்து இனிப்பு தின்று சுறுசுருப்பாயின – தீக்காய பிரிவும் தீயணைப்புப் படையும்! முனு.சிவசங்கரன்

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | 2 பின்னூட்டங்கள்

ஈழம்

கத்தி எடுத்ததும் குண்டு வெடித்ததும் வரலாறு; குழந்தை கொன்றதும் குடி அறுந்ததும் வரலாறு; ரத்த ஆறு கடந்து மனித சடலம் குவித்து எரித்தது வரலாறு; பெண்களை கெடுத்து கொன்றதும் கொன்று கெடுத்ததும் வரலாறு; எல்லாம் வரலாறு வரலாறே மிஞ்சிக் கிடக்க – ஒரு விடியல் கிடைக்காமலே ஈழம்! ——————————————- வித்யாசாகர்

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

எங்கெங்கோ ஓடி ஓடிக் கலைத்த

எங்கெங்கோ ஓடி ஓடிக் கலைத்த வாழ்வின் போராட்டங்களில் மறவாத ஏதோ ஒரு – சம்பவத்தையேனும் – நினைவு படுத்தி விடுகிறது; ஏதேனும் ஒரு கவிதை! எனவே கவிதை எழுதுங்கள் – காலை வணக்கமும் உரித்தாகட்டும்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் – 1

அப்பனைக் கொன்று ஆற்றில் போட்டாய் அன்னையைக் கொன்று அடுப்பினுளிட்டாய் அண்ணனைத் தம்பியை அக்காளைத் தங்கையை மாமனை மச்சானை மடிதிறந்த மனைவியைப் பேரனைப் பாட்டனை பூட்டனை அறத்தைச் சொன்ன ஆசானைத் தோழனை இன்ன பிறவெல்லாம் கொன்றாய் – தேசத்து விடுதலையின் பெயரால்.” “எச்சங்களில் – “எந்த எலும்பு” உனது உறவினதென ஒருநாள் நீ அலைவாய்! இவையெல்லாம் எதன் … Continue reading

Posted in நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் | 5 பின்னூட்டங்கள்

பிரிவுக்குப் பின் – வேலைக்கென வெளியூர் சென்று..

வேலைக்கென வெளியூர் சென்று, அக்கா தங்கைக்கென சில வருடங்கள் கழித்து, நாற்பதின் நெருக்கத்தில் திருமணமாகி, பிறந்ததும் பெண்ணாக பிறப்பின்; அதும் இரண்டோ மூன்றோ பிறப்பின், அவர்களை கரைசேர்க்க காலமெல்லாம் அயல் நாடுகளில் வாழ்ந்துவிட்டு, ரத்த சூடும்; குடும்ப பாரமும் குறைகையில், வீடு வரும் அண்ணாச்சிகள்; எத்தனை பேரை கண்ணீர் மல்க வழியனுப்பி விட்டிருக்கிறோம் ‘இந்த பாலை … Continue reading

Posted in பிரிவுக்குப் பின்! | பின்னூட்டமொன்றை இடுக