என் விரல் பிடிக்காத வானம்

ன் விரல் பிடிக்காத –
வானம்;

என் கால்கள்
மிதித்திடாத பூமி;

என் தலை மேல் தாங்குமென்
வாழ்விடம்;

அவ்வப்பொழுது தொட்டு
சிலிர்க்க வைத்து –
தன்னை முழுதாக அறிந்து கொள்ள
விடாததொரு –
காலம் விழுங்கிய தோற்றம்;

நிறைவுறாத இயக்கம்
நம்மை எல்லாம் இயக்கி
இணைக்கும் தமிழுக்கும்,

அத்தமிழை சிறப்பிக்குமென்
தமிழுறவிற்கும் –
அன்பு வணக்கங்கள்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக