சில யதார்த்தங்கள்

நிலா இரவில்
நடைகொண்ட வாழ்க்கை;

சிறிது வெளிச்சம்
நிறைய இருட்டாகத் தான்
நம் மெத்த பயணமும்;

இடையே,
மின்னும் நட்சத்திரமும்
கால் தட்டும் கற்களுமாய்
தெரிந்தும் தெரியாததுமென
பல யதார்த்தங்களை கடந்தே
மரணமென்னும் –
ஒற்றை சொல்லில்
நீயும் நானும் முட்டிக் கொள்கிறோம்;

எப்படியோ,
தவிர்க்க இயலா மரணம் தாண்டி
காலம் நம்மை கேட்காமலே கடந்து
சூரியனை தொட்டுவிட்ட பிறகும்
நிறைய பேருக்கு –
விடியாததே சாபம்!
————————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே... Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக