Daily Archives: திசெம்பர் 23, 2009

ஹைக்கூ – 24

சொல்லில் பொருளில் பேச்சில் எதிலுமே புரிவதில்லை வாழ்க்கை!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 23

மேய்ந்து கொண்டிருந்த கோழியை துரத்திப் பிடித்து கழுத்தை அறுத்து தோலை உரித்து கண்டம் துண்டமாக வெட்டி வறுத்து தின்று விட்டு ஏப்பம் விடுகையில் கொலையற்று போகிறது ஒரு உயிரின் இழப்பு!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 22

கற்காலத்திலிருந்து நெற்காலத்திற்கு வந்து பொற்காலமாக மாறுமென நம்பி நம்பியே முடிகிறது நம் காலம்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 21

வழிக்க வழிக்க முளைக்கிறது தாடியும் சாதியும்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ – 20

சுற்றி சுற்றி ஒரு கூடை பழம் விற்ற கிழவியின் சிரிப்பை திருடித் தான் கொள்கிறது கால்வலி!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக