ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

பிள்ளுக் கட்டுப் போல சேர்த்து
சுட்டு சாய்த்த –
ஜனங்க நாங்க;

சிங்கள அரசு திமிரை எதிர்த்து
மாறு தட்டின –
தமிழன் தாங்க!

உயிரை கொடுத்து-
உயிரை கொடுத்து-
ஈழங் காத்த – மனுஷ(ன்) தாங்க;

காலங்காலமா ஒரு இனம்
செத்து மடிந்தும் –
தட்டிக்கேட்காத இந்திய(ன்) நீங்க!

முள்ளு வெளி கம்பியெல்லாம்
எங்க பார்வை சொட்டின –
ஈரம் பாருங்க;

சிங்கள வெறி – பசிக்குக் குடிக்க
எப்படி ஈழ ரத்தம் –
இனிக்குதோங்க!

முப்பது வருஷம்
வெடி சப்தத்துல –
செத்துபொழச்சும் சாதிக்கலீங்க;

இப்படி அனாதையாகி
நிக்கிற வலிக்கு –
குண்டு வெடிச்சே சாகலாங்க!

இந்தியாவும் தமிழ்நாடும்
சேர்ந்து நின்னா –
இந்த முள்ளுக் கம்பி தைக்குமாங்க???

ஈழத் தமிழன் செத்து மடியறது
உங்களுக்கு எப்பவுமே வெறும்
செய்தி தாங்க!

கிழடுகட்டை செத்தா சாகுது
கேட்கவேனாம் –
விட்டுப் போங்க;

எங்க குழந்தையெல்லாம் மாண்டு போனா
நாளைக்கு ஈழமென்ன –
மீந்து போன வரலாறாங்க???

அதனால ஒண்ணுமில்ல
நீங்க கெளம்பி கடைக்கு போங்க,

தட்டு நிறைய பலகாரம் வெச்சி
புதுசு புதுசா பேண்ட்டு சட்டை போட்டு
மத்தாப்பும் வெடியுமா வெடிச்சி –
தீபாவளிய கொண்டாடுங்க;

ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின –
ஈமச் செய்தி வந்தா

ஏப்பம் வரும் நேரத்துல
ஈழம் பத்தின –
ஈமச் செய்தி வந்தா

சேனல் மாத்தி நமிதா டான்ஸ் பாருங்க;

இந்தியாவும் சீனாவும்
சேர்ந்தடிக்கிற கூத்துல –
சிங்கள அரசு இன்னும்
ஜொலிக்கும்;

நீங்க நின்னுப் பார்க்கிற
வேடிக்கையில –
ஈழக் கண்ணீர் சிதறி
உங்க தீபாவளியில சிரிக்கும்!
——————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

2 Responses to ஈழத்து ரத்தத்துல; கொண்டாடுவோம் தீபாவளி!

  1. ரூபன்'s avatar ரூபன் சொல்கிறார்:

    இது ஒவ்வொரு தமிழனும் படிக்கவேண்டிய கவிதை அண்ணா
    அதுவும் வெளிநாட்டுவாழ் தமிழர்கள் படிக்கவேண்டிய கவிதை

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      தாய் பசு தன் கன்றுக்குட்டியை பார்த்த சந்தோஷம் ரூபன். வெகு நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட சம்பாசனை இது என்றாலும், அவைகளை தாண்டி கவிதைக்கான மறுமொழியாய், ஆமென ஒத்துக் கொள்கிறேனப்பா.., நலமென்றும் நம்பிக் கொள்கிறேன். வாழ்க!

      Like

பின்னூட்டமொன்றை இடுக