Monthly Archives: திசெம்பர் 2009

இரும்பெனக் கொண்ட இதயத்தில்

இரும்பெனக் கொண்ட இதயத்தில் தான் எத்தனை எத்தனை ஓட்டைகள் வாழ்வின் பயங்கள்..??? அத்தனையையும் – அன்பினாலும், விட்டுக் கொடுத்தலாலும், உண்மை புரிதலாலும், விசால மனம் கொள்ளும் தெளிவிலும் அடைத்து விடுகையில் – நமை அறியாதெழும் நம் கம்பீரம்; வீரமெனக் கொள்ளப் படும் தோழர்களே! இனிய அன்பு வணக்கம்!

Posted in என் இனிய உறவுகளுக்கு வணக்கம் | பின்னூட்டமொன்றை இடுக

மரணத்தை கேட்டுப் பார்..

ஓ.. மனிதா! ஒரு கால தூர இடைவெளியில் நிகழ்கிறது – உனக்கும் எனக்குமான போர்; நேற்றைய அண்ணன் இன்றைய பங்காளிகளல்ல நாம்; மனிதன் பிறப்பிலிருந்தே சுயம் அறுக்காதவன் – நேற்றிலிருந்தே அவன் அப்படித் தான் எப்படி இன்றோ; இடையே பிறந்து ஏதோ ஒரு புள்ளியில் அற்று போகிறது பாசமும் நட்பும் காதலும்; கேட்டால் விருப்பு வெறுப்பென்றோ … Continue reading

Posted in சிலல்றை சப்தங்கள் | பின்னூட்டமொன்றை இடுக

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 4”

கழுகு கழுகாரே.. கழுகாரே.. முக்கால் மைல் தூரம் மேலே பறந்தாலும் கீழேயுள்ள உயிர்கள் கூட உனக்கு நன்றாகத் தெரியுமாமே; நீ – மகாவிஷ்னுவிற்கே வாகனமாமே; கொஞ்சம் மேலே பறந்து வட்டமடித்து வா – எங்கள் தமிழீழ மண்ணில் புதைக்கக் கூட இல்லாமல் காடுகளில் ஆங்காங்கே – அழுகிக் கிடக்கும் ஒவ்வொரு உடலுக்குள்ளும் ஒவ்வொரு வரலாறிருக்கும் சொல்வாயா … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 2 பின்னூட்டங்கள்

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள்”

எல்லோருக்கும் பறவை கவிதை பிடிக்குமென்று நினைக்கிறேன். அது ஒரு வலியின் சுவடு.. தவிர இக் கவிதைகளுக்கு காரணம் சொல்லவேண்டாம் அது ஒரு வலி வேதனை ரணம், உடல்கட்டை எரிந்தாலும் ஆறாத காயம். நேரில் காணாவிட்டாலும் காதுக்கருகில் வெடிக்காத சிங்கள குண்டுகளின் சப்தம் என் மனதை தொலைத்த வலிகளும், நாளிதழ்களிலும், மின்னஞ்சல்களில், செய்திகளிலும் ரத்தம் ரத்தமாக கண்ட … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

“ஈழக் கண்ணீரில் – பறவை கவிதைகள் – 5”

சிட்டுக் குருவி சிட்டுக் குருவிக்கு வணக்கம்; வணக்கம் ஐயா; எங்கிருந்து வருகிறாய் – ஏனிப்படி சோகமாகத் தெரிகிறது உன் முகம்? உன் கிரீச் கிரீச் சப்தமெங்கே காணோம்? வேண்டாமைய்யா என்னை ஏதும் கேட்காதீர்கள்; நான் – ஈழத்திலிருந்து வருகிறேன்; கை முடமும்.. கால் முடமும்.. தலை துண்டிக்கப் பட்டும்.. கண்டம் துண்டமாய் மனிதர்கள் வெட்டப் பட்டும்.. … Continue reading

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | 1 பின்னூட்டம்