என் எழுதுகோல் வணங்கிய மாவீரன்

டுக்கத் துணிந்த வரலாறு – திலீபனை
மறந்து தொலைத்தால் பெரும்பாடு;
இதயம் உருக்கும் கதை கேளு – திலீபன்
இறந்து படைத்த உணர்வோடு!

இருபத்திநான்கு வருட – வாழ்க்கையடா
பன்னிரண்டு நாள் – விரதமடா
உயிரை வெல்லக் கொடுத்த வீரனடா
அஹிம்சைக்கு அர்த்தம் தந்த – தியாகியடா!

முடுக்குமூளை உணர்வெல்லாம் –
திலீபன் –
மூளைமுடுக்கு உணர்வெல்லாம் –

விடுதலை உணர்வை கொடுத்த யோகியடா; தன் –
உயிரை கொடுத்து ஈழம் படைக்க –
அவன் இறந்தே உரைத்த ஆணையடா!

உலகம் –
திரும்பிப் பார்த்த தமிழனடா
வீரம் –
செறிந்துக் கிடந்த இளைஞனடா;
திலீபன் மட்டும்
இருந்திருந்தால்-

இன்று திலீபன் மட்டும்
இருந்திருந்தால்-
ஈழம் என்றோ கிடைத்த
செய்தியடா!

எழுந்து வீர
நடை போடு..
விடுதலை கிடைக்காவிட்டால் –
சமர் போடு..
தமிழர் செங்குருதி பாயும் –
இடமெல்லாம்;

தமிழர் செங்குருதி பாயும் –
இடமெல்லாம்;
ஈழம் பிறக்கும் வரைக்கும் –
போராடு!

அன்றைய –
ஐந்து கட்டளை போறாது;
அண்ணலை நினைவு கூர்ந்தால்
அடங்காது;

ஈழம்.. ஈழம்.. கிடைக்கும் வரை –
திலீபனின் ஆத்தமா கூட
உறங்காது!!!!
———————————-
வித்யாசாகர்

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s