பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 6

நியாயம்

தோ ஒரு பட்டாம்பூச்சி
பறக்கிறது..

பட்டாம்பூச்சியிடம் கேட்டேன்
‘எனக்கு ஒரே ஒரு
இறக்கையை
குடேன்..

பட்டாம்பூச்சி சொன்னது –

‘நானுனக்கு என்
இறக்கைகளை
தருகிறேன்;

நீ யெனக்கு
உன் கைகளை
தருவாயா???
————————
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக