Monthly Archives: ஜனவரி 2010

கருப்பு; கருப்பு; கருப்பு (7)

வெளிச்சத்தின் பிறப்பிடம் இருட்டின் தாய் நிறம் – கருப்பு; வண்ணங்களின் மூலாதாரம் வாழ்வின் அஸ்தமனம் பேசும் – மொழி கருப்பு! மூடதனம் தகர்க்க – மூச்சு விட்ட புரட்சி நெருப்பு – கருப்பு; சாஸ்திர சம்பிரதாய திநிப்புகளை தகர்த்து எரித்த தீ நாக்கு – கருப்பு! வெள்ளை போர்த்திய மனதின் உள்ளிருக்கும் உண்மை கருப்பு; மெல்ல … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –89

இருக்கும் காற்றிற்கும் சுடும் நெருப்பிற்கும் அணைக்கும் நீருக்கும் அணைக்கும் பூமிக்கும் அள்ளிக் கொள்ளும் வானத்திற்கும் எனக்கும் உனக்குமிடையே ஒரு ஈர்ப்பு தெய்வீகமாய் இல்லாமலில்லை இருக்கென்றும் உணர மட்டுமே மானிடப் பிறப்பானோம்!

Posted in எத்தனையோ பொய்கள் | 2 பின்னூட்டங்கள்

ஹைக்கூ –88

யாரையும் வணங்கவில்லை நான் யாரையும் கெடுக்கவில்லை நான் யாவரும் நானாக பாவிப்பதில் நீயும் நானும் – கடவுளாவோம் வா..

Posted in எத்தனையோ பொய்கள் | 4 பின்னூட்டங்கள்

ஹைக்கூ –87

மரக் கட்டைக்கு பொட்டு வைத்ததில் பக்தனானவன் மரக்கட்டை என்று சொன்னதில் பித்தனானேன்!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

ஹைக்கூ –86

நெருப்பு மிதித்து நிரூபிக்க – கேட்டிடாத சாமிக்கு தான் மிதித்து மிதித்து மிதித்து எரிகிறது சாமி!

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக