Monthly Archives: ஜனவரி 2010

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 10

மனிதன் தொலைத்த மனிதம் வெகுநேரமாய் பார்க்கிறேன் – ஒரு பட்டாம்பூச்சி இங்குமங்குமாய் சுற்றியது; எதையோ தேடுவதாய் நினைத்துக் கொண்டே பட்டாம்பூச்சியை பார்த்தேன்; என்ன பார்க்கிறாய் என்றது பட்டாம்பூச்சி, ஒன்றுமில்லை – நீ எதையோ தெடுகிறாயே என்றேன், உனக்காகத் தான் தேடுகிறேன், எங்கேனும் நீ தொலைத்த மனிதம் கிடைத்தால் – கொண்டு சென்று இலங்கையில் கொடுப்பேனென்றது! —————————- … Continue reading

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 9

காதல் உனக்கொரு பட்டாம்பூச்சியை பிடித்துத் தருகிறேன்; நீ – எனக்கொரு பட்டாம்பூச்சியை பிடித்துக் கோடு; இரண்டிற்கும் சம்மதமென்றால் நாமும் காதலிக்கலாம்! ———————————- வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 7

ஈழத்து வெளிக்குள்ளே; ஈழத்து முட்கம்பிகளுக்கு வெளியே ஒரு பட்டாம்பூச்சி பறந்து போனது.., ஒரு குழந்தை என்னிடம் வந்து – அந்த பட்டாம்பூச்சியை பிடித்துத் தரச் சொல்லிக் கேட்டது; அந்த பட்டாம்பூச்சிக்கு இருக்கும் சுதந்திரம் எனக்கில்லை யென அந்தக் குழந்தியிட மென்னால் சொல்லமுடிய வில்லை! ————————————— வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 8

பாவம் ஏழு வண்ணம் தானென்கிறார்கள்; உனக்கு மட்டுமெப்படி இத்தனை வண்ணமென்றேன் ஒரு பட்டாம்பூச்சியிடம்; உடனே ‘அணைகின்ற தீபம் சுடர்விட்டு எரியுமென்றது பட்டாம்பூச்சி! ——————— வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக

பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 6

நியாயம் அதோ ஒரு பட்டாம்பூச்சி பறக்கிறது.. பட்டாம்பூச்சியிடம் கேட்டேன் ‘எனக்கு ஒரே ஒரு இறக்கையை குடேன்.. பட்டாம்பூச்சி சொன்னது – ‘நானுனக்கு என் இறக்கைகளை தருகிறேன்; நீ யெனக்கு உன் கைகளை தருவாயா??? ———————— வித்யாசாகர்

Posted in எத்தனையோ பொய்கள் | பின்னூட்டமொன்றை இடுக