Monthly Archives: ஜனவரி 2010

மதம் – இன்றைய பார்வையில் (11)

மனிதன் – தன் தலைமேல் இட்டுக் கொண்ட முதல் தீ – மதம்! அணுகுண்டு வீசாமல் வெடிக்கும் மனிதக் கொல்லி – மதம்! கடவுளை காட்ட புறப்பட்டு கொலை கொள்ளை கற்பழிப்பை கூட தனக்குள் திணித்துக் கொண்ட சமயோசிதி – மதம்! மனிதனை மனிதனாகவும் மிருகமாகவும் – வளர்க்கும் சக்தி – மதம்! இறைவனை சென்றடைய … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

கொசு (10)

சாக்கடை பிரிதிநிதிகளின் பறக்கும் பட்டாளம்; சமூக சீர்கேடர்களின் கண்ணெதிர் ஆதாரம்! பசிக்கு நோய் பரப்பும் குழந்தைகளின் எம அவதாரம்; விரட்டி விரட்டி விட்டாலும் நசுக்கும் வரை ஓயாத அற்பத்தின் விலாசம்! மனிதன் செய்யும் தவறுகளுக்கு இயற்கை – மறைமுகமாக தீட்டிய டிங்கு காய்ச்சல் திட்டம்; சூரியன் அற்ற பொழுதுகளில் ரத்தம் குடிக்கும் – கொசு – … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

பூ (9)

விதவையின் வெள்ளை நெற்றியில் முள்ளாய் குத்திய பூ; பெண்ணின் தாவணி கனவுகளில் மங்களமாய் மணக்கும் பூ! மரண சாலையில் – சுனாமி குவித்த பிணங்களாய் கசங்கி மிதிபடும் பூ; திருப்பதியோ திருத்தனியோ தொட்டுவிட்டால் திருப் பிரசாதம் பூ! தெருக்களில் கூவி கூவி விற்றவளின் வயிற்றுப் பசிக்கு – உணவு தரும் பூ; பூ பூவென கத்தியவளின் … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

காற்றின் ஓசை – (3) மரமும் செடியுமென் ஜாதி..

இதற்கு முன் நடந்தது.. ஏமனின் ஐந்தாம் நாள்! மாலனின் ஜோர்டானிய பேச்சு ஏமன் நாட்டிலும் நன்கு விளம்பரம் செய்ய பட்டு நிறைய ஏமானியர்களை கூட்டி வைத்திருந்தது ‘மனிதமும் மேன்மையும்’ இயக்கம். இந்த நான்கு நாட்களில் ஏமனின் அதிகபட்ச நிறை குறைகளை கணக்கெடுத்துக் கொண்டதில் ‘அந்நாட்டின் முன்னேற்றம் பற்றியும்., கடவுள் பற்றியும்., தியானம்., வாழ்க்கை., உலக நிலை..பற்றியும் … Continue reading

Posted in காற்றின் ஓசை - நாவல் | Tagged , , , , , , | 2 பின்னூட்டங்கள்

வெயில் (8)

உழைக்கும் வர்கத்தின் உடல் சுடும் நெருப்பு; வெயில்! இலையுதிர்ந்த மரங்களின் பசுமை பூப்பிக்கும் தகிப்பு; வெயில்! எட்டித் தொட இயலா சூரிய முகத்தை மண்ணில் பதிக்கும் பதைப்பு; வெயில்! மனித குல முன்னேற்றத்திற்கு வெளிச்சம் போர்த்திய எரிப்பு; வெயில்! பூமி சூழ்ந்த கடலை உறிஞ்சிக் குடிக்கும் உழைப்பு; வெயில்! உப்பையும் மழையையும் மண்ணுக்குக் கொடுக்க இயற்கை … Continue reading

Posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக