ஹைக்கூ –63

நெற்றியில் நெருப்பெரிகிறது,
உடம்பு –
வெற்றுத் துணையில் வேகிறது,
மேலே விழும் கண்களால்
உள்ளம் – காயம் கொள்கிறது,
கழுத்திலில்லாத தாலிக்கு மட்டும்
காசு கொடுக்க எத்தனையோ பேர் –
வரிசையில் நிற்கிறார்கள்;
நான் விதவை தானே!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக