நிறைய இதயங்கள்
இங்கு தான் உறைகின்றன;
உலகின் தூரங்களை ஒரு
சின்ன பொத்தான்களில் சுருக்கிவிடுகிறது
தொலைபேசி!
காதல் பேசியும்
அரசியல் தகவலறிவித்தும்
குடும்ப விவாதம் பகிர்ந்தும் வீட்டின்
ஐந்தாம் சுவராய் அவசியப்பட்டுப் போனது
தொலைபேசி!
கால வேகத்திற்கு
கையில் அடங்கி போயி;
உலக விஸ்த்தாரிப்பை
ஒரு சொடுக்கலில் அறிவித்து;
மொபைல் ஃபோனாகவும் பிறந்தாலும்
அலைபேசியென அர்த்தம் கொண்டுவிட்டதில் –
தொலைபேசிக்கே பெருமை!
————————————————
வித்யாசாகர்

























அருமையான கவிதை,நண்பரே
LikeLike
என்னருமை தோழமையே என் கவிதை கசந்து போயிற்றோ, காணவில்லையே ரசனை சீமானை என்றெண்ணினேன்; மிக்க நன்றி செல்வா..
LikeLike