பட்டாம்பூச்சிக் கவிதைகள்; பட்டாம்பூச்சிக்கு சமர்ப்பணம் – 10

மனிதன் தொலைத்த மனிதம்

வெகுநேரமாய்
பார்க்கிறேன் –
ஒரு பட்டாம்பூச்சி
இங்குமங்குமாய்
சுற்றியது;

எதையோ தேடுவதாய்
நினைத்துக் கொண்டே
பட்டாம்பூச்சியை
பார்த்தேன்;

என்ன பார்க்கிறாய்
என்றது பட்டாம்பூச்சி,

ஒன்றுமில்லை – நீ
எதையோ
தெடுகிறாயே என்றேன்,

உனக்காகத் தான்
தேடுகிறேன், எங்கேனும்
நீ தொலைத்த மனிதம்
கிடைத்தால் –
கொண்டு சென்று

இலங்கையில்
கொடுப்பேனென்றது!
—————————-
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in எத்தனையோ பொய்கள். Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக