ஞானமடா நீயெனக்கு – 7

ங்கே வா
இதை எடுக்காதே
அதை செய்யாதே
அங்கே போகாதே
அடிப்பேன்.. உதைப்பேன் என்றெல்லாம்
மிரட்டுகையில்,
உனக்கு என் மீது
கோபம் வரும்போல்;
கண்களை கசக்கி நீ
என்னையே பார்ப்பாய்.

நீ மீண்டும் அங்கே போய்
அதை எடுத்து
எதையேனும் செய்து
எங்கேனும் போய்
எனை ஏமாற்றிவிட்டதாய்
துள்ளி குதிக்கும் அந்த சிரிப்பிற்காய்
நான் மீண்டும் காத்திருப்பேன்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக