இங்கே வா
இதை எடுக்காதே
அதை செய்யாதே
அங்கே போகாதே
அடிப்பேன்.. உதைப்பேன் என்றெல்லாம்
மிரட்டுகையில்,
உனக்கு என் மீது
கோபம் வரும்போல்;
கண்களை கசக்கி நீ
என்னையே பார்ப்பாய்.
நீ மீண்டும் அங்கே போய்
அதை எடுத்து
எதையேனும் செய்து
எங்கேனும் போய்
எனை ஏமாற்றிவிட்டதாய்
துள்ளி குதிக்கும் அந்த சிரிப்பிற்காய்
நான் மீண்டும் காத்திருப்பேன்!
























