Daily Archives: ஏப்ரல் 29, 2010

89 வாழ்க்கையை படி!

நிறைய நிரபராதிகளின் வாதம் – சிறை கம்பிகளுக்கிடையே நின்று – உலகை வெறித்தாலும், வெளியே நிற்கும் குற்றவாளிகளுக்கு வெறும் – பணம் தரும் சிரிப்பு பணம் தீரும்போதே நின்றும் விடுகிறது! நிற்க, இங்கே சிறைக் கம்பிகளுக்கிடையே வீழ்ந்த ‘நியாயமே’ பேசப் பட வேண்டுமெனில் – நிரபராதிகள் காலத்தின் கேள்வியாய் சிறைகம்பிகளுக்கு மத்தியில் நில்லாமையை நீயும் நானும் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

90 வாழ்க்கையை படி!

குடிப்பவன் குடிக்கிறான் நல்லவனென நடிப்பவன் நடிக்கிறான், இருப்பவனின் நாற்றம் வெளியில் தெரிவதில்லை. இல்லாதவனின் நாற்றம் பெரிது படுத்தப் படுவதில்லை. இரண்டுக்கும் மத்தியில் பண்பாடு குலைகிறது அநாகரிகம் கூட நாகரீகமென மெச்சப் படுகிறது; காலமாற்றம் என்னும் ஒற்றை பெயரில் – நிறைய பேர் தவறாகவே பதியப் பட்டிருக்கிறோம் – கால ஏட்டில்!!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்

91 வாழ்க்கையை படி!

ஊரெல்லாம் மரணமும் மல்லிகை தோரணமும் வேளை வேளைக்கு சோறும் உடுத்த பட்டாடையும் மினுக்க அத்தனையும் இருந்துக் கொண்டு தானிருக்கிறது; இறப்பவரை பற்றியும் அழுபவரை பற்றியும் வருந்தாத இடத்திலிருந்தே – சிரிப்பவருக்கும் – மினுக்குபவருக்கும் மரணுமும் மல்லிகையும் மறுபரிசீலனை செய்யப் படுகிறது!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

92 வாழ்க்கையை படி!

பூமி உருண்டையாம் இருக்கலாம், சுற்றுகிறதாம் இருக்கலாம், இருந்தும் – என்றோ நாம் தொலைத்த விஷயங்கள் பூமி சுற்றி வருகையில் கிடைத்திடாததே வருத்தம் என்கிறோம், ஒன்றை புரிவோம் – நாம் தொலைத்த அனைத்தும் நம்மை சுற்றியே கிடக்கின்றன; தொலைத்ததும் – எடுக்க வேண்டியதும் நாமே; நாமே; மாற்று வழி இல்லாது இயற்கையில் ஏதுமே மறைவதில்லை!!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

93 வாழ்க்கையை படி!

எத்தனையோ ஆனந்தாக்கள் – நம்மை சீர்குலைத்து பாடம் புகட்டுகிறார்கள்; நிறைய வங்கி கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வாங்கிக் கொண்டு நமக்குக் – கொஞ்சம் தருகிறது; வேளைக்கு சம்பளமும் வாங்கிக் கொண்டு – வேலையையும் முழுதாக செய்யாமல் மேலே லஞ்சமும் வாங்கி பின்பும் நாலுமுறை இழுக்கடித்து செய்து எவனோ கால் மேல் கால் போட்டு அமர்கிறான். இதெல்லாம் … Continue reading

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | 2 பின்னூட்டங்கள்