ஞானமடா நீயெனக்கு – 22

முத்தம் கொடு என்றால்
உதட்டை கன்னத்தை பிடித்துக்
கடிக்கவோ –
எச்சிலொழுக பார்த்து
சிரிக்கவோ மட்டுமே
தெரியுமுனக்கு;

அதை தாண்டி
முத்தமென்றால் இப்படியென
சொல்லாமலேயே –
வரிசையில் நிற்கிறோம்
நானும் –
உன் அம்மாவும்
உன் எச்சிலில் நனைந்த
அந்த -முத்தத்தின் அன்பிற்காய்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக