சுவற்றில் ஆணியடித்த
மூடர்களின் கடவுள்;
நல்லநேரம் கெட்டநேரம் என்றெல்லாம்
சொல்லி விளம்பரத்திற்காய் –
வீடு வரும் பித்தன்;
ராகுகாலம் எமகண்டமென்று
ஏமாற்றும் சமூக சீர்கேடர்களின் கைக்கூலி;
காசுவாங்கிக் கொண்டு
அப்பாவி பொதுமக்களை ஏமாற்றும்
கால துரோகி!
நாட்களின் நகர்தலை
அளந்து காட்டுவதாலும் –
நாளொரு தகவல் கொண்டு இயங்குவதாலும்
மட்டுமே –
பணம் கொடுத்து வாங்கிவரும்
தமிழ் கொலையாளிகளின் ஆட்காட்டி;
இன்றைய நாட்காட்டி!
———————————————–
வித்யாசாகர்

























வித்யாசமான தலைப்பில் …ஒரு அருமையான கவிதை. தொடரட்டும் கவிப்பணி. வாழ்த்துக்கள்.
LikeLike
காலத்தின் மாறுபாடுகள் கவிதையாடலில் உட்படும் போது வித்யாசாப் படுகிறதெனில்; காலமும் வித்தியாசங்களுக்கு திரிக்கப் பட்டுத் தான் உள்ளது போல். மிக்க நன்றி சகோதரி!
LikeLike
நம் வழியில் நாம் போக வேண்டும்
அது போல தொடங்க வேண்டியது தான்
நல்ல முயற்ச்சி
LikeLike
ஆம்; தோழமையே… நம் வழி பொதுவாகி விடல் வேண்டும்; பொது வழி நம் வழியாக சிறப்பித்தல் வேண்டும். மிக்க நன்றியென் தோழமையே!
LikeLike