தெருக் குழாய் (13)

குடிசைவாசிகளின் தெருக்கடவுள்
உயிர் வாழ்தலுக்கான –
ஏழைகளின் முதல் உணவு!

வாழ்ந்ததற்காகான அடையாளத்தில்
மறக்க மறுக்கும் –
நினைவுச் சின்னம்!

வந்து போவோருக்கு
தாகம் தீர்க்கும் –
எந்திர தன – கொடையாளி!

வறுமை தீரா அரசின்
கட்டளைக்கிணங்கி இயங்கும் –
பகுதி நேர ஊழியன்;

கஞ்சு சோறும் கால்ரூபாய் ஊறுகாயோடும்
வயிறு நிறையும் மருந்து போட்ட
குவளை நீர்!

காதலர்கள் காலையில்
விழித்ததும் சந்திக்கும் –
முதலிடம்!

குடும்பத்து குத்துவிளக்குகள்
வாய் வாள் வீசி –
வீட்டு அசிங்கத்தை தெருவில் இரைக்கும் போர்க்களம்!

இதலாம் தாண்டி,

யார் யாரோ வந்தாகிவிட்டது
ஆண்டாகிவிட்டது
மகன் பிறந்து பேரன் பிறந்து
கொள்ளுப் பேத்தி அதோ குழாயடியில் நிற்கிறாள் –

சொந்தமாக ஒரு வீடும் ஒரு குழாயும்
கனவாகவே நகர்கிறது – நிறையப் பேரின் காலம்;

தெருக்குழைக்கு ஆதலாம் தெரிவதேயில்லை
தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது!!
————————————————————————————————–
வித்யாசாகர்

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அம்மாயெனும் தூரிகையே.., கவிதைகள் and tagged , , . Bookmark the permalink.

6 Responses to தெருக் குழாய் (13)

  1. அகல்விளக்கு's avatar அகல்விளக்கு சொல்கிறார்:

    உங்கள் கவிதையில் வியந்து போனேன்……

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      வாழ்வின் அடையாளங்களில் தொலைந்து போன நம் சிரிப்பிற்கான காரணங்களையே கவிதையாக்க முயல்கையில்; தங்களின் பிரம்மிப்பில் நானும் சிலிர்த்தே போகிறேன்.. மீண்டும் மீண்டுமாய் பயணத்தில் கரைகிறேன். மிக்க நன்றிகளென் தோழமையே!

      Like

  2. aarul's avatar aarul சொல்கிறார்:

    நன்றாக உள்ளது

    Like

  3. munusivasankaran's avatar munusivasankaran சொல்கிறார்:

    //குடிசைவாசிகளின் தெருக்கடவுள்
    உயிர் வாழ்தலுக்கான –
    ஏழைகளின் முதல் உணவு//

    பட்டை தீட்டாமலேயே; பளீரிடும் சிந்தனை!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      ஆம்; சில – கண்ணில் பார்த்ததும் ஒட்டிக் கொள்ளும் வேதனைகளுக்கு பட்டைத் தீட்ட அவசியப் படுவதில்லை. வேதனையின் ரணத்தை மட்டும் உணர்வுகளை மட்டும் பதிய முயல்கையில் பட்டை தீட்டும் புலமையோ நேரமோ இன்றி போகிறது சிவசங்கரன். இன்னும் நன்றாக எழுத இனி வரும் காலங்களில் முயற்சிக்கிறேன். வருகைக்கு மிக்க நன்றி!

      Like

aarul -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி