ஞானமடா நீயெனக்கு – 6

ரிரு பருக்கைகள் தான்
கீழே விழுகின்றன
நீ எடுத்து வாயில் வைக்கையில்
மிரட்டி –
நீ கீழே போட்டதும்
எடுத்து எங்கோ வீசுவேன்.
நீ நானென்னவோ நீ தின்பதை
பறித்துக் கொண்டதாய்
பார்ப்பாய்.
வேறென்ன, நான் கையில் வைத்திருக்கும்
உனக்கான ஒரு தட்டு சோறு
நான் தின்னாத மிச்சமென
உனக்கு தெரியவா போகிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

2 Responses to ஞானமடா நீயெனக்கு – 6

  1. suganthiny75's avatar suganthiny75 சொல்கிறார்:

    oru thaajanpai velippaduthy irukkireerhal.

    Like

  2. suganthiny75's avatar suganthiny75 சொல்கிறார்:

    coments eluthy irunthen reply varalai

    Like

பின்னூட்டமொன்றை இடுக