ஞானமடா நீயெனக்கு – 15

ழை வருகிறது
நீ ஓடிச் சென்று
மழையில் நனைகிறாய்,

நான் –
ஐயோ மழையில்
நனைந்து விட்டாயேயென
பிடித்து உன்னை வீட்டிற்குள்
அழைத்து வருகிறேன்
தலை துவட்டிவிடுகிறேன்

உன் ஈர விழியிலிருந்து
சுடும் நீர் சொட்டொன்று –
எனை எரிப்பது போல் தரைதொடுகிறது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக