ஞானமடா நீயெனக்கு – 13

தியானம் செய்கையில்
மடிமீது வந்து
அமர்ந்து கொள்கிறாய்,

சாமி கும்பிடுகையில்
நானுனை –
தூக்கிக் கொள்கிறேன்.

இடையே –
நீ என் மூக்கை பிடித்து
விளையாடுவாய்..
காதை நோண்டி சிரிப்பாய்..
கைதட்டி என் காதோரம் கத்துவாய்..

எனக்கு –
உள்ளே நான் வணங்கும் கடவுள்
வெளியே –
என்னோடிருப்பதாய் இருக்கும்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக