பிரிவுக்குப் பின் – 54

நினைவின்
பயணங்கள் தான்
எங்கெங்கோ..

அதில் நீளும் பயணமாய்
நீயும் உன் பிரிவுகளும்;

வெறும் –
பயணமாக மட்டுமின்றி

உயிரின் இயக்கியாய்..
சிரிப்பின் அர்த்தங்களாய்..
வாழ்வின் அவசியமாய்..

வாழும் அர்த்தங்களுக்கு –
அவ்வப்போது சுகமும்

பிரிவின் வலியையும்
கற்பிப்பவளாய்
நீ.. நீ.. நீ மட்டுமே!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்!. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக