நினைவின்
பயணங்கள் தான்
எங்கெங்கோ..
அதில் நீளும் பயணமாய்
நீயும் உன் பிரிவுகளும்;
வெறும் –
பயணமாக மட்டுமின்றி
உயிரின் இயக்கியாய்..
சிரிப்பின் அர்த்தங்களாய்..
வாழ்வின் அவசியமாய்..
வாழும் அர்த்தங்களுக்கு –
அவ்வப்போது சுகமும்
பிரிவின் வலியையும்
கற்பிப்பவளாய்
நீ.. நீ.. நீ மட்டுமே!
























