89 வாழ்க்கையை படி!

நிறைய நிரபராதிகளின்
வாதம் –
சிறை கம்பிகளுக்கிடையே
நின்று –
உலகை வெறித்தாலும்,

வெளியே நிற்கும்
குற்றவாளிகளுக்கு
வெறும் – பணம் தரும் சிரிப்பு
பணம் தீரும்போதே
நின்றும் விடுகிறது!

நிற்க,
இங்கே சிறைக் கம்பிகளுக்கிடையே
வீழ்ந்த ‘நியாயமே’ பேசப் பட
வேண்டுமெனில் –

நிரபராதிகள்
காலத்தின் கேள்வியாய்
சிறைகம்பிகளுக்கு மத்தியில் நில்லாமையை
நீயும் நானும்
சேர்ந்து சிந்தித்தாலன்றி மாறாது!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in அரைகுடத்தின் நீரலைகள்.. and tagged , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக