பிரிவுக்குப் பின் – 66

விடாமழையில்
நனைந்த ஈரம் போல்

கவலையில் –
நனைந்து கனத்த
இதயமாகவே –
என் பயணம்;

சிரிப்பு
நிம்மதி
என்னும் முட்களின் மீதே
நகர்கிறது – உன்
பிரிவுக்குப் பின்..

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in பிரிவுக்குப் பின்! and tagged , , , , . Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக