Monthly Archives: ஏப்ரல் 2010

33 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

வன்னித் தீவில் ஒரு – குழந்தை கதறி அழுதது. போருக்குப் போன அப்பா இறந்திருக்கலாம்.. அம்மா போருக்குப் போகும் வழியில் கூட இறந்திருக்கலாம்.. குழந்தை – தானும் சென்று ஒரு சிங்களனையாவது சுட்டு என்னிரு – தமிழரை காக்கவில்லையே – யென அழுதது போல்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

32 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

போரில் விடுதலைக்காய் உயிர்விட்டவர்கள் போர்வீரர்கள் ஆனார்கள். அருகில் இருந்தும் வேடிக்கை மட்டுமே பார்த்தவர்கள் – கோழைகளா?? கல்நெஞ்சக் காரர்களா?? எதிர்க்கும் திராணி போதாதவர்களா??? அவரவரே – முடிவு செய்துக் கொள்ளட்டும்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

31 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

ஒரு இனத்தின் பிணவாடை – உலகமெலாம் வீசியும் மூக்கை மூடிக் கொண்டு சேனல் மாற்றியது அதே சுயநல இனம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

30 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

பசுமை வளர்த்த இனம் – பிறப்பு இறப்பு பதிவின்றி பிணங்களாய் குவிந்தது வரலாற்றில்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக

29 முள்ளிவாய்க்கால் நினைவு தினக் கவிதைகள்!

மயான கிடங்காய் நீண்டது – முல்லைவாய்க்கால், வெறும் செய்தியாக மட்டுமே – காண்பிக்கப் பட்டது தமிழரின் மரணம்!

Posted in தமிழீழக் கவிதைகள், விடுதலையின் சப்தம் | பின்னூட்டமொன்றை இடுக