Monthly Archives: ஏப்ரல் 2010

94 வாழ்க்கையை படி!

காற்றையும் நீரையும் வெளிச்சத்தையும் விலையாக்கிக் கொண்டு விலை கொடுத்து வாங்க ஓடும் – உழைக்கும் – வஞ்சினம் கொல்லும் நம்மை காற்றும் நீரும் வெளிச்சமும் பார்த்து சிரிக்காமலா இருக்கும்??

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

95 வாழ்க்கையை படி!

நல்லவர் கெட்டவருக்கு இடையே தவறை திருத்திக் கொள்ளுமளவே இடைவெளி; திருந்தாதவருக்கும் சாமானியருக்கும் நல்லவன் கெட்டவன் என்பதே – உலகின் அளவுகோல்!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

96 வாழ்க்கையை படி!

எத்தனை முறை அடித்தாலும் – மீண்டும் மீண்டும் அதே தவறை செய்கிறது குழந்தை; பிறகு வளர்கையில் பாதி திருந்தியும் பாதியை தனக்குள் மறைத்தும் கொண்டதில் – நல்லவர்களாகி விடுகிறோம் நாமெல்லாம்!

Posted in அரைகுடத்தின் நீரலைகள்.. | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

137 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

அதிவேக சாலையில் திடீரென – குறுக்கே வந்த வாகனம் கண்டு தற்காலிகமாக அழுத்திய வேகத்தடையில் – வண்டி நின்றுவிட்டாலும், இதயம் – சுக்குநூறாக உடைந்து படபடக்கிறது!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

136 வாகனம் ஓட்டுபவரா நீங்கள்???

மிதிவண்டியில் பயணிக்கையில் – மோட்டார் பைக் பெரிதாக தெரிந்தது; மோட்டார்பைக் வாங்கிய போது மகிழுந்து பெரிதாக தெரிந்தது; மகிழுந்து ஓட்டுகையில் பேருந்தோ லாரியோ பெரிதாக தெரியவில்லை!

Posted in உடைந்த கடவுள் | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக