ஞானமடா நீயெனக்கு – 17

னக்காக நான்
தேடித் தேடி வாங்கிய
விளையாட்டுப் பொருட்களை
உனக்கு அதிகம் பிடிப்பதில்லை,

உனக்குப் பிடித்ததெல்லாம்
உடைந்த காரும்
வீட்டு உபயோகப் பொருட்களும்
கைகால் இல்லாத பொம்மைகளும் தான்.

சரி வேறென்ன செய்வதென
உடைந்த பொம்மைகளையெல்லாம்
பாதிவிலைக்கு வாங்கிவந்தேன்,

நீ தூக்கி என்மீதெறிந்து விட்டு
புதியது வாங்கித் தா என்றாய்,

நான் புதிய பொம்மைகளை தேடி
கடைக்கு ஓடுகிறேன்,
நீ வாங்கிவந்த உடன்
உடைத்துப் போட –
வாசலிலேயே காத்திருக்கிறாய்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக