ஞானமடா நீயெனக்கு – 12

ப்பொழுதெல்லாம் நீ
நன்றாகவே நடக்கிறாய்,

இருந்தும் –
சந்தைக்கு செல்கையில்
வீடு வருகையில்
வெளியே செல்கையில்
உனை தூக்கிக்கொண்டே
நடக்கிறேன்,

நீ கனத்தாலும்
உனை சுமப்பதில்
எனக்கொரு ஆசை;

சொர்கத்தை சுமப்பது
இப்படித் தான் –
சுகம் போல்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

பின்னூட்டமொன்றை இடுக