வணக்கம் வருக வருக..
இதுவரை வந்தவர்கள்
- 903,044
இங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க
தமிழில் தட்டச்ச

திருக்குறள் படிக்க

முகில் பதிப்பகம் பார்க்க

அறிவிப்பு!!
மறுமொழி அச்சிடப்படலாம்
படைப்பு வகைகள்
- அணிந்துரை (18)
- அது வேறு காலம்.. (3)
- அறிவிப்பு (70)
- ஆய்வுகள் (19)
- உன்மீது மட்டும் பெய்யும் மழை (25)
- என் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)
- ஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)
- கட்டுரைகள் (8)
- கவிதைகள் (888)
- அம்மாயெனும் தூரிகையே.. (72)
- அரைகுடத்தின் நீரலைகள்.. (67)
- உடைந்த கடவுள் (105)
- உயிர்க் காற்று (4)
- எத்தனையோ பொய்கள் (92)
- ஒரு கண்ணாடி இரவில் (20)
- கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)
- கண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)
- கல்லும் கடவுளும்.. (32)
- காதல் கவிதைகள் (66)
- சின்ன சின்ன கவிதைகள் (19)
- சிலல்றை சப்தங்கள் (3)
- ஞானமடா நீயெனக்கு (70)
- தமிழீழக் கவிதைகள் (87)
- நீயே முதலெழுத்து.. (30)
- பறக்க ஒரு சிறகை கொடு.. (51)
- பறந்துப்போ வெள்ளைப்புறா.. (35)
- பிஞ்சுப்பூ கண்ணழகே (7)
- பிரிவுக்குப் பின்! (83)
- கவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)
- காற்றாடி விட்ட காலம்.. (32)
- காற்றின் ஓசை – நாவல் (18)
- குறும்படம் (1)
- சிறுகதை (78)
- சிறுவர் பாடல்கள் (9)
- சில்லறை சப்தங்கள் (1)
- சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)
- சொற்களின் போர் (2)
- திரை மொழி (27)
- நம் காணொளி (5)
- நாவல் (17)
- நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)
- நீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)
- நேர்காணல் (6)
- பட்டிமன்றம் (4)
- பாடல்கள் (28)
- மீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)
- முதல் பதிவு (1)
- வசந்தம் தொலைக்காட்சி (1)
- வானொலி நிகழ்ச்சிகள் (5)
- வாழ்த்துக்கள்! (29)
- வாழ்வியல் கட்டுரைகள்! (46)
- விடுதலையின் சப்தம் (57)
- விருது விழாக்கள் (3)
- English Poems (1)
- GTV – இல் நம் படைப்புகள் (10)
சமூகக் கதைகள்..

ஆன்மிகக் கதைகள்..

படைப்பாக்கப் பொதுமங்கள்

This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License.
Monthly Archives: ஏப்ரல் 2010
ஞானமடா நீயெனக்கு – 15
மழை வருகிறது நீ ஓடிச் சென்று மழையில் நனைகிறாய், நான் – ஐயோ மழையில் நனைந்து விட்டாயேயென பிடித்து உன்னை வீட்டிற்குள் அழைத்து வருகிறேன் தலை துவட்டிவிடுகிறேன் உன் ஈர விழியிலிருந்து சுடும் நீர் சொட்டொன்று – எனை எரிப்பது போல் தரைதொடுகிறது!
Posted in ஞானமடா நீயெனக்கு
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 14
அன்பும் கண்டிப்பும் குழந்தைக்கு – ஒருசேர வேண்டுமென அவ்வபொழுதுனை கண்டிக்கிறேன், நீயோ .. ஒரு – சின்ன அதட்டலில் மிரண்டு போகிறாய், அடித்து விடுவேனோ என பயந்து ஒடுங்குகிறாய், உனக்கான என் கோபம் உனக்காகத் தான் என்றாலும் அதத்தனைக்காகவும் எனை மன்னிப்பாயா???
Posted in ஞானமடா நீயெனக்கு
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 13
தியானம் செய்கையில் மடிமீது வந்து அமர்ந்து கொள்கிறாய், சாமி கும்பிடுகையில் நானுனை – தூக்கிக் கொள்கிறேன். இடையே – நீ என் மூக்கை பிடித்து விளையாடுவாய்.. காதை நோண்டி சிரிப்பாய்.. கைதட்டி என் காதோரம் கத்துவாய்.. எனக்கு – உள்ளே நான் வணங்கும் கடவுள் வெளியே – என்னோடிருப்பதாய் இருக்கும்!
Posted in ஞானமடா நீயெனக்கு
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 12
இப்பொழுதெல்லாம் நீ நன்றாகவே நடக்கிறாய், இருந்தும் – சந்தைக்கு செல்கையில் வீடு வருகையில் வெளியே செல்கையில் உனை தூக்கிக்கொண்டே நடக்கிறேன், நீ கனத்தாலும் உனை சுமப்பதில் எனக்கொரு ஆசை; சொர்கத்தை சுமப்பது இப்படித் தான் – சுகம் போல்!
Posted in ஞானமடா நீயெனக்கு
பின்னூட்டமொன்றை இடுக
ஞானமடா நீயெனக்கு – 11
எச்சில் – ஒழுக ஒழுக எனைக் குடிக்கிறாய், உடம்பெல்லாம் ஏறி மிதித்து கன்னம் கீறி மூக்கை கடித்து தலைமுடி பிடித்திழுத்து உதட்டை கிள்ளி அப்பப்பா… உனை என்ன செய்கிறேன் பாரென்று வந்த கோபத்தை – ஒரேயொரு முத்தத்தில் ஒத்திஎடுக்கிறாய். நான் கொஞ்சம் சிரிக்கையில் மீண்டும் – நீ கிள்ளி கீறி எனை ஏறி மிதிக்க நீள்கிறது … Continue reading
Posted in ஞானமடா நீயெனக்கு
4 பின்னூட்டங்கள்


















