Monthly Archives: ஏப்ரல் 2010

ஞானமடா நீயெனக்கு – 15

மழை வருகிறது நீ ஓடிச் சென்று மழையில் நனைகிறாய், நான் – ஐயோ மழையில் நனைந்து விட்டாயேயென பிடித்து உன்னை வீட்டிற்குள் அழைத்து வருகிறேன் தலை துவட்டிவிடுகிறேன் உன் ஈர விழியிலிருந்து சுடும் நீர் சொட்டொன்று – எனை எரிப்பது போல் தரைதொடுகிறது!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 14

அன்பும் கண்டிப்பும் குழந்தைக்கு – ஒருசேர வேண்டுமென அவ்வபொழுதுனை கண்டிக்கிறேன், நீயோ .. ஒரு – சின்ன அதட்டலில் மிரண்டு போகிறாய், அடித்து விடுவேனோ என பயந்து ஒடுங்குகிறாய், உனக்கான என் கோபம் உனக்காகத் தான் என்றாலும் அதத்தனைக்காகவும் எனை மன்னிப்பாயா???

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 13

தியானம் செய்கையில் மடிமீது வந்து அமர்ந்து கொள்கிறாய், சாமி கும்பிடுகையில் நானுனை – தூக்கிக் கொள்கிறேன். இடையே – நீ என் மூக்கை பிடித்து விளையாடுவாய்.. காதை நோண்டி சிரிப்பாய்.. கைதட்டி என் காதோரம் கத்துவாய்.. எனக்கு – உள்ளே நான் வணங்கும் கடவுள் வெளியே – என்னோடிருப்பதாய் இருக்கும்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 12

இப்பொழுதெல்லாம் நீ நன்றாகவே நடக்கிறாய், இருந்தும் – சந்தைக்கு செல்கையில் வீடு வருகையில் வெளியே செல்கையில் உனை தூக்கிக்கொண்டே நடக்கிறேன், நீ கனத்தாலும் உனை சுமப்பதில் எனக்கொரு ஆசை; சொர்கத்தை சுமப்பது இப்படித் தான் – சுகம் போல்!

Posted in ஞானமடா நீயெனக்கு | பின்னூட்டமொன்றை இடுக

ஞானமடா நீயெனக்கு – 11

எச்சில் – ஒழுக ஒழுக எனைக் குடிக்கிறாய், உடம்பெல்லாம் ஏறி மிதித்து கன்னம் கீறி மூக்கை கடித்து தலைமுடி பிடித்திழுத்து உதட்டை கிள்ளி அப்பப்பா… உனை என்ன செய்கிறேன் பாரென்று வந்த கோபத்தை – ஒரேயொரு முத்தத்தில் ஒத்திஎடுக்கிறாய். நான் கொஞ்சம் சிரிக்கையில் மீண்டும் – நீ கிள்ளி கீறி எனை ஏறி மிதிக்க நீள்கிறது … Continue reading

Posted in ஞானமடா நீயெனக்கு | 4 பின்னூட்டங்கள்