கையசைத்துவிட்டு
பள்ளிக்கு செல்கிறாய்,
எனக்கென்னவோ
நான் தான் உனை விட்டுப்
பிரிவது போல் வலி,
நீ – குதூகலத்தோடு
ஓடிவந்து –
எனக்கொரு முத்தமிட்டு விட்டு
புதியதாய் ஒரு
சுதந்திரம் கிடைத்தாற்போல்
ஓடுகிறாய்;
எது உனக்கு
சந்தோஷம்?
எனைவிட்டுப் பிரிந்திருப்பதா
இல்லை,
யாருமே உனை கண்டித்திராத ஒரு
உலகமா???!!

























eththanai koody koduththaalum kidaikkaatha antha gnabafam varuhirathu.
LikeLike