ஞானமடா நீயெனக்கு – 8

கையசைத்துவிட்டு
பள்ளிக்கு செல்கிறாய்,

எனக்கென்னவோ
நான் தான் உனை விட்டுப்
பிரிவது போல் வலி,

நீ – குதூகலத்தோடு
ஓடிவந்து –
எனக்கொரு முத்தமிட்டு விட்டு
புதியதாய் ஒரு
சுதந்திரம் கிடைத்தாற்போல்
ஓடுகிறாய்;

எது உனக்கு
சந்தோஷம்?

எனைவிட்டுப் பிரிந்திருப்பதா
இல்லை,
யாருமே உனை கண்டித்திராத ஒரு
உலகமா???!!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

1 Response to ஞானமடா நீயெனக்கு – 8

  1. suganthiny75's avatar suganthiny75 சொல்கிறார்:

    eththanai koody koduththaalum kidaikkaatha antha gnabafam varuhirathu.

    Like

suganthiny75 -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி