ஞானமடா நீயெனக்கு – 16

குச்சி மிட்டாய்
காட்டுகலக்கா
கைவிரல் அப்பளமென்றால்
உனக்கு கொள்ளை இஷ்டம்,

கடைக்கு போகும்போதெல்லாம்
கேட்பாய்,

வாங்கிக் கொண்ட கணம்
துள்ளி ஒரு குதிகுதிப்பாய்
குதூகலத்தில் கைதட்டி சிரிப்பாய்

அந்த சிரிப்பை காண்பதற்காகவே
சிலநேரம் –
அவசியமின்றி கடைக்குப் போவேன் நான்!

Unknown's avatar

About வித்யாசாகர்

நள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே!
This entry was posted in ஞானமடா நீயெனக்கு. Bookmark the permalink.

2 Responses to ஞானமடா நீயெனக்கு – 16

  1. Gani's avatar Gani சொல்கிறார்:

    //அந்த சிரிப்பை காண்பதற்காகவே
    சிலநேரம் –
    அவசியமின்றி கடைக்குப் போவேன் நான்//

    hahah..

    nice!

    Like

    • வித்யாசாகர்'s avatar வித்யாசாகர் சொல்கிறார்:

      மிக்க நன்றி நண்பரே..

      குழந்தைகளின் சிரிப்பும் ஆர்ப்பரிப்பும் காணக் கான சுகம் தானே பெற்றோருக்கு. எங்களுக்கு முகிலின் சிரிப்பும் சந்தோசமுமென்றால் கண்டுகொண்டே இருக்கத் தோன்றும்! அந்த உணர்வுகளே கவிதைகளாகின்றன!

      Like

வித்யாசாகர் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி